<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-27697679</id><updated>2011-04-21T21:36:11.281-07:00</updated><title type='text'>வாழ்க தமிழ்த் தேசியம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://navneth.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27697679/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://navneth.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>navneth</name><uri>http://www.blogger.com/profile/09193681887270637188</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-27697679.post-114703044075904939</id><published>2006-05-07T12:26:00.000-07:00</published><updated>2006-05-07T12:34:00.776-07:00</updated><title type='text'>விடுதலைப்புலி</title><content type='html'>&lt;span style="color:#ff6666;"&gt;                     துரோகி கருனாவின் மறுபக்கம்&lt;/span&gt;&lt;br /&gt;துரோகி கருணாவின் மறுபக்கம் நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போரை பல சோதனைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களிற்கும் ஈடுகொடுத்து அதை வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத் தலைவருக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ள விசுவாசமான தளபதிபதிகளுக்கும் போராளிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் உறுதுணையான மக்களுக்கும் நான் எழுதப் போகும் தொடரின் உண்மைச் சம்பவங்களை இதுவரை காலமும் தலைமைக்குக் கூட மறைத்ததிற்கு மன்னிப்புக்கோரி நிற்கிறேன்.மேலும் நான் இந்தக் கபடதாரியும் நம்பிக்கைத் துரோகியுமான கருணாவின் தில்லுமுல்லுகளைப் பலவருடத்திற்கு முன்னரே கூறியிருப்பேனானால் இந்தத் தொடரில் வரும் சம்பவங்களைப் போல் ஏற்பட்டிருக்கும். அதாவது கடைசியாகத் தனது பிரச்சனையைத் தெரிந்து தலைமைக்குக் கூற முற்பட்ட போராளிக்கு எப்படிக் குளிர்பானத்தில் சயனைட் கலந்து கொன்றானே அப்படி எனக்கும் நடந்திருக்கும்.மேலும் தமிழீழப்போரை கொச்சைப்படுத்தி அடாவடி செய்த இந்தக் கயவன் கருணாவின் மூச்சை எப்போதோ என் துப்பாக்கி நிறுத்தியிருக்கும். ஏனெனில் அருகிலிருந்த எனக்கு இது பெரிய காரியமாக அப்போது இருக்கவில்லை. ஆனால் அந்த அயோக்கியன் அன்று மரவீரராகியிருப்பான் நானோ துரோகியாகியிருப்பேன். (2) இதுவரை காலமும் என்மனதை அரித்துக் கொண்டிருந்த இந்தச் சம்பவங்களை எழுதுவதால் நான் விட்ட பிழைக்கு பிராயச்சித்தமாகி விடுதல் என்ற ஓர் ஆத்ம திருத்தியடைகிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.ஏனெனில் கருணாவின் அருகிலிருந்தபடியால் அந்தத் துரோகியின் உணர்வுகள் கபட நடவடிக்கைகள் அவன் புன்னகைக்குள் மறைந்திருந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை மறைந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை நேரடியாகக் கண்டவன் நான் என்பதால் இத் தொடரை எழுதுவதற்கு எனக்கு இலகுவாக உள்ளது. அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்..மேலும் ஜரோப்பாவில் மட்டுமல்ல இலங்கை உட்பட வேறு வெளிநாடுகளில் வாழும் கருணா என்ற துரோகிக்குச் சபாரம் வீசப் பிரதேசவாதம் பேசும் பித்தலாட்டக் காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.மீண்டும் மீண்டும் உங்கள் உடம்பெல்லாம் பிரதேசவாதம் என்னும் சேற்றை பூசுகிறீர்கள். எட்டப்பன் என்ற பெயரை தொட்டு நிற்காதீர்கள். உங்கள் காதுகளை எட்டாத பல விடயங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன் எனவே இத் தொடரில் நீங்கள் தெளிவடைந்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு கொடுப்பீர்கள் என எண்ணுகின்றேன். (3) தீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.மேலும்,விடுதலை உணர்வு கொண்ட வேனுதாசின் சத்தியாக்கிரக போராட்டம் என்பனவும் மட்டக்களப்பு மாவடத்தில் நடந்தவைகள்.இப்படியிருக்கும் போது தானே கிழக்கின் ஒரு ஆரம்ப கால விடுதலை வீரன் என்றும் கிழக்கின் மக்களுக்காக இன்றும் போராடப்போகின்றேன் என்றும் பொதுவான விடுதலைபோராட்டத்தை மட்டுமன்றி மட்டு-அம்பாறையின் விடுதலை போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு இருக்கும் இந்த கருனா என்ற தேசத்துரோகியை நினைக்க நகைப்பிடமாகவுள்ளது.இந்த ஆயோக்கியன் யார்!இவனின் தனிப்பட்ட மனிதபடுகொலைகள் என்ன?இந்த குள்ள நரியின் குள்ள விளையாட்டுக்கள் என்ன?கபட செயல்கள் என்பன சிலர் அறிந்தும் அறியாத கதைகள் இதை தெரிந்தவர்கள் கூட சில சூழ்நிலைகளில் வாய்பேச முடியாத மௌனிகளான சம்பவங்கள் எத்தனையோ உள்ளளன.தேசியத்தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும் இயக்கத்தில் தான் பெற்ற பயிற்சியையும் அந்த இயக்கத்திற்கே பாவித்து வெற்றீயிட்ட இந்த துரோகி ஒன்றும் பெரிய போர் வீரனல்ல! வெறும் தேசத்துரோகி முரளிதரன்தான்.இறுதியில் துரோகிகள் பெற்ற பாடங்கள் என்ன! அவர்களின் இறுதிக்கதி என்ன! என்று இந்த நாகரீக உலகில் நாமறிந்த உண்மை இதுவே உலகின் யாதார்த்தம் எனவே தர்மத்துக்காக விடுதலைபோரை முன்னெடுத்து செல்லும் எம்தேசியத்தலைவரையும் தர்மப்போரில் வீரச்சாவை தழுவிக்கொன்ட மாவீரர்களையும் மக்களையும் ஓருதடவை மனதில் முன்நிறுத்தி தமிழ்தேசியம் எனும் உணர்வை உங்கள் முன் ஒரு தடைவ படரவிட்டு தொடர்கின்றேன் இந்த துரோகின் தொடரை…பொறுத்திருங்கள் தொடர்கிறது (4) கருனாவின் முதல் படுகொலை பிறந்த கிராமமான கிரானில்…கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.தான் பிறந்த கிராமமான கிரானில் மக்களிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும் மற்றும் எல்லோரும் தன்னை கண்டால் பயபக்தி அவர்களுக்குள் ஏற்படவேண்டும் என்றும் கருணா நினைத்தான். இதற்காக பினைத்தைத் தேடும் ஒநாய் போல அலைந்தான். அவ்வேளையில் கருனாவின் வலையில் சிக்கினான் கிரானைச்சேர்ந்த அப்பாவித்தமிழன்.அந்த பொது மகன் சயனைட் வைத்திருந்தான் என்றும், தான் இயக்கபோராளி என்று எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்தான் மற்றும், தனிப்பட்ட ரீதியான செயல்கள் செய்தான் என்றும் கருனாவால் கைது செய்யப்பட்டான்.அந்த பொதுமகனை கருணாவும் சந்திவெளியை சேர்ந்த மதியும் சித்திரவதை செய்தனர். மதி என்பவன் கருணாவின் தனிப்பட்ட விசுவாசியாகயிருந்தவன். அந்த மதி யார்? அவனின் பின்னனி என்ன? இறுதியில் அந்த துரோகியின் கதி என்ன என்றெல்லாம் பிற்பகுதியில் பார்ப்போம்.மேலும்,அந்தப்பொதுமகனை மதி மண்வெட்டியால் அடித்து கொன்றான். ஒரு இராணுவ உளவாளியை தாம் கைது செய்து கொன்று விட்டதாக கருணா கதைபரப்பினான்.இப்படுகெலையை மட்டக்களப்பின் தமிழிழவிடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் ஜீம்கலித்தாத்தா கடுமையாக எதிர்த்தார். இப்படுகொலைச்செய்த மதியை இயக்கத்தை விட்டே துரத்த வேண்டும். கருணாவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜிம்கலித்தாவும் கிரானை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பித்தக்கது. இதனால் கருனாவுக்கும் ஜிம்கலித்தாவுக்கும் முறுகல் நிலை கூட ஏற்பட்டது. அப்போது ஜிம்கலித்தாவின் குரல் எதிரொலிக்கவில்லை.அப்போதைய சூழ்நிலையில் உண்மையான நிலை தலைமைப்பீடத்திற்கு கருணாவால் கூறப்படாமல் மறைக்கப்பட்டது. கருணாவின் காட்டில் மழை!கருணா கயவனாக இனி காலடி வைக்க தொடங்கிறான் ஆதலால் இனி கயவன் என்றே தொடரலாம்…கருணாவும் மதியும் அதாவது கயவர்கள் இருவரும் நமட்டு சிரிப்புடன் கைகுழுக்கிக்கொண்டார்கள். எப்படி இனிக் காய்களை நகர்த்துலாம் என கருணா என்ற அந்தக்கயவன் ஆழமாகச்சிந்தித்தான். பல கயவத்தனங்கள் அவன் சிந்தனையில் நிழலாடினாலும் தான் இயக்கத்தில் வேகமாக வளரவேண்டும் தன்னை நிலப்படுத்த என்ன செய்யலாம் என திட்டமிட்டான்.பொறுத்திருங்கள் மட்டக்களப்பு வருங்கால தளபதியாக வரவிருந்த கிரானை சேர்ந்த ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!(5) ஜிம்கலித்தாவும் கருணாவின் ஊரான கிரானனைச்சேர்ந்தவர்தான். இவரது குடும்பத்திற்கு அவ்ஊரில் பெரும்மதிப்பிருந்தது.அது மட்டுமல்ல தமிழினப்பற்றுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனனில் துரோகி கருணாவின் குடும்பத்தினர் ஜக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்கள். அந்தக்கட்சியின் கொள்கையுடனே செயற்பட்டனர். பிற்காலத்தில் கருணாவின் சகோதரிகள் ஜக்கியதேசியக்கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி அரசவேலைகளிலும் அமர்ந்தனர். இது கிரானில் உள்ளளர்களுக்கு தெரிந்த ஒரு விடயம்.மேலும்,கருணாவின் சகோதரி ஒருவர் ஜக்கியதேசியக்கட்சியியுள்ளவரும் முஸ்ஸிம் காங்கிரஸ் ஆதரவாளருமான ஒரு முஸ்ஸிம் செல்வந்தரைத் திருமணம் செய்து முஸ்ஸிம் மதத்தை தழுவி முதூரில் வாழ்கின்றார். மேலும், அவ் முஸ்ஸிம் செல்வந்தர் ஜிகாத் அமைப்பின் தீவிர ஆதரவாளராக தற்போதும் செயல்பட்டு வருவதாக அறியமுடிகிறது.மேலும், ஜிம்கலித்தாத்தாவுடன் ஆரம்பத்திலே குடும்ப ரீதியாக கருணாவுக்கும் பகை இருந்து கொண்டேயிருந்தது. ஜிம்கலித்தாவுக்கு கிரானில் மட்டும் அல்ல சகபோராளிகளிடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரத்தொடங்கியது. இது கருணாவின் மனதை பெரிதும் பாதித்தது மட்டுமல்ல சங்கடத்தையும் கொடுத்தது.கிரான் மக்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தன்னையே ஒரு தளபதியாக கருதவேண்டும் கிரான் மக்களினதும் சகபோரளிகளினதின் மனதிலிருந்து ஜிம்கலித்தாவை துக்கியெறியவேண்டுமென்றும் பல தனிப்பட்ட காரணங்களால் தாத்வை பழிவாங்க துரோகி கருனா காத்திருந்தான்..!அதற்கு சந்தர்ப்பம் 1986ன் ஆண்டளவில் வந்தது. நான்கு அல்லது ஜந்து கிலோ மீற்றர் துரத்த்திற்குள் தற்போது புலனாய்த்துறைப் பொறுப்பாளராகவுள்ள பொட்டம்மானின் முகாம் உட்பட பல முகாம்கள் இருந்த போதிலும் ஜிம்கலித்தாவின் முகாமே சிங்கள இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது.தனது தன்னிச்சையான அராஜக நடவடிக்கைக்கு பொட்டமான் உட்பட பல தளபதிகள் எதிராகயிருந்த போதும் தனது முதல் எதிரியான ஜிம்கலித்தாவே கருனா குறி வைத்தான். எனவே தான் தனது காட்டிக்கொடுப்பு நடவடிக்கையை ஜிம்கலித்தாவின் முகாமிலே செய்தான். ஆனால் வேறு சில நபர்கள் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள இராணுவத்தால் அனுப்பட்டு அவர்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணத்தை அவர்களுக்குள் பங்கீடு செய்யும் போது எற்பட்ட குழறுபடியால் இக்கதையை கசிய விட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்து. இருப்பினும் இப்படியான ஒரு முகாம் இருப்பதையே சிங்கள இராணுவத்தினருக்கு காட்டிகொடுத்தவன் துரோகி கருணாவாகும். அதன்பின்னர்தான் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள இராணுவத்தினரால் அந் நபர்கள் அனுப்பட்டனர்.அவர்கள் மாடு தேடுவர்கள் போலவே சென்றனர்.மேலும்,கருணா எந்த முறையில் சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்தான் என்பது தெரியாது. ஆனால் துரோகி கருணாவின் வடமுனையைச் சேர்ந்த உறவுக்காரர் ஜிம்கலித்தாவின் முகாம் எப்படி காட்டிகொடுக்கப்பட்டது என்பதனை மதுபோதையில் உளறினார். இவர் மதுபோதையில் உளறுகின்றார் என்றும் ”குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”என்று கூறி அந்நபரை பின்னர் துரோகி கருணாவின் சகாக்கள் அடித்து நொறுக்கினர் பின்னர் அவர் வாய்திறக்கவில்லை! அதன் பிறகு அந்நபரும் கானாமல் போய்விட்டார்.மேலும், இச்சுற்றிவளைப்பில் ஜிம்கலித்தாத்தா உட்பட மெட்டைகஜன் மற்றும் கிரானை சேர்ந்த 6 போராளிகளும் மற்றும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மட்டக்களப்பில் வசித்து பின்னர் போராளியான ஓருவர் உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தனர்.மேலும்,இச்சுற்றிவளைப்பு லெப்.கேணல் குமரப்பா தலமையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..,இச்சுற்றிவளைப்பில் செங்கலடியைச்சேர்ந்த சீனிப்போடியாரின் மகனான சுதா (தற்போது நோர்வேயில் வசிக்கிறார்)மற்றும் வழைச்சேனையைச்சேர்ந்த கப்டன் வில்லியம் போன்றோர் தப்பினர்.மேலும் சுதா சயினைட் அருந்தி உயிர்தப்பியவர் என்பது குறிப்பிடதக்கது. அந்த காலபகுதியல் மிகப்பெரிய சுற்றிவளைப்பாகவே இது கருதப்பட்டது.மேலும், ஜிம்கலித்தா எதிரியுடன் கடைசிவரை போராடி இறுதில் வீரச்சாவை அடைந்தார்.ஜிம்கலித்தாவின் தற்கொடை உணர்வும் தேசியப்பற்றும் தென்தமிழிழமக்களிற்கு எடுத்துக்காட்டும் கிரான் மண்னே பெருமை கொள்ள கூடியதும் போற்றக் கூடியதுமான ஒரு மாவீரருமாவார்.மேலும், ஜிம்கலித்தாவின் CZ பிஸ்டல் 1990யில் கருனாவால் கண்டெடுக்கப்பட்டு அது பிற்பகுதியில் ஒரு அயோக்கியனுடனிடம் ஒப்படைக்கப்பட்டு அது எந்த வழியில் பயன்பட்டது என்று வரும் தொடர்களில் பார்ப்போம். பொறுத்திருங்கள் கருணாவின் கிரிமினல்கள் தொடரும்…(6) கப்டன் பிரான்சிஸின் தியாக வேட்கையும் கருணாவின் தீயசெயலும்யார் இந்த பிரான்சிஸ்?இலட்சியவாழ்வு!தளர்விளா உறுதி!தலமைத்துவ விசுவாசம்வீரம், ஈகை, தியாகம், அர்ப்பணிப்புஇதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாகயிருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவன்தான் இந்த பிரான்சிஸ். தேசியத் தலைவரின் அன்புக்குரியவன் கேணல் கிட்டுவின் தோழமைக்குரியவன். தூரநோக்குக் கொண்ட தீர்க்க தரிசன ஒரு அரசியல் போராளி என்றே இவனைக் கருதலாம்.மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு என்னுமிடத்தில் சடாட்சரபவான் என்ற இயற்பெயருடன் பிறந்த இவன் தனது சிறுவயதிலிருந்தே ஆரம்பக் கல்வியில் மிக தேர்ச்சியுள்ளவனாவே இருந்தான்.இயற்கையாகவே தமிழ்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இவன் தமிழ் இளைஞர் பேரவையின் ஆதரவாளராகயிருந்தான்.இக்காலகட்டத்தில் தனது மேற்படிப்பை அம்பாறை காடி தொழில்நுட்பக் கல்லூரியிலும் கொழும்பு கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றான். தனது கல்விக்காலத்தில்கூட மட்டக்களப்பு அரச சிறையிலிருந்த இவன் வாழ்க்கைப்படிகளில் பல சிக்கல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு நடந்த இந்த இலட்சியவாதிக்கு தான் செல்லும் பாதைக்கும் இலட்சியத்திற்கும் ஊன்றுகோலாக ஆணிவேராகவும், அத்திவாரமாகவும், பக்கபலமாகவும் தன்னை நிலைப்படுத்தி தனது கொள்கையை மேன்படுத்த இலட்சியம் தவறாத ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது.ஆம், அந்த மாபெரும் சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1982ல் தன்னை இணைத்துக்கொண்டான். இந்த மாவீரனின் இயக்க வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியிலும் சக போராளிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது உண்மையே!1983இல் பயிற்சிக்குச் செல்லும் போராளிகளுக்கு மட்டு அம்பாறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். இவனது இயக்க அரசியல் வகுப்புக்கள் தன்னிகரானது. தனித்துவமானது. இவனது இயக்க அரசியல் போதனையால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குள் காலடி எடுத்துவைக்க ஏதுவாகயிருந்தது என்பது மறக்கமுடியாதது.1983 காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதில் இயக்க ஆதரவாளர் நிர்மலாநித்தியானந்தன் அச்சிறையுடைப்பு சம்பந்தப்பட்டவர்களின் திறமையற்ற நடவடிக்கையால் கைவிடப்பட்டார்.1984இல் மீண்டும் அதை கப்டன் பிரான்சிசும், பசில்காக்காவும் இரண்டு கைத்துப்பாக்கியுடனே இதைச்செயல்படுத்தி நிர்மலாநித்தியானந்தனை மீட்டு பொலநறுவை வழியாக மதவாச்சி சென்று அங்கிருந்து மன்னார் புநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கு பக்குவமாககொண்டு சேர்த்தனர்.இந் நடவடிக்கையானது அக்காலப் பகுதியில் பெரிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.எனவேதான் அவ்விடயம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.1984 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை பிரான்சிஸின் இயக்கவேலைகள் பரந்திருந்தன. அக்காலப் பகுதியில் தேசியத்தலைவரைச் சந்திப்பதும் கேணல் கிட்டுவைச் சந்திப்பதுமாக இவர் இயக்கப்பணியில் வேகமாக ஈடுபட்டான். கேணல் கிட்டுவுடன் சேர்ந்து பல இயக்கப்பணிகளை யாழில் மேற்கொண்டு தலைவரிடத்திலும் நன் மதிப்பைப் பெற்றான்.மேலும் கேணல் கிட்டுவின் நம்பிக்கையான தோழமைமிக்க அன்புமிக்க போராளியாகவும் கப்டன் பிரான்சிஸ் செயற்பட்டான்.எனவே தமிழ் தேசியக் கொள்கைகளையும் ஒற்றுமைகளையும் அந்நாட்களிலேயே இவனது பரந்துபட்ட இயக்கப்பணியால் வளர்ச்சிகண்டது என்றும்கூட கூறத்தகுந்துதான்.அரசியல் பணியில் மட்டுமல்ல எதிரிகள் மீதான முக்கியமானதாக அந்நாட்களில் கருதப்பட்ட பல தாக்குதல்களிலும் கப்டன் பிரான்சிஸின் பங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் சிறிலங்கா பொலிஸ் நிலையத்தாக்குதலான கஞவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தாக்குதல் 1984லும் மற்றும் 1985ல் ஏறாவ+ர் பொலிஸ் நிலையத்தாக்குதல். 1984ல் தம்பட்டையில் மிகப்பெரிய தாக்குதலாக அப்போது பேசப்பட்ட STFஇனர் மீதான பதுங்கித் தாக்குதல் என்பன கப்டன் பிரான்சிஸின் பெயர் சொல்லக்கூடிய தாக்குதலாகயிருந்தது.பிரான்சிஸின் இந்த இயக்க வளாச்சியையும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் செல்வாக்கையும் எப்படி தகர்த்தெறியலாம். அதற்கு என்னவழிவகை என கருணா என்ன கயவன் கணக்கிட்டான். அதுமட்டுமல்ல பிரான்சிஸிற்கு அருணா கொடுத்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலை எப்படியோ சதிசெய்து பறிக்கவும் திட்டமிட்டான்.1987இல் இதற்கான செயலில் இறங்கிய கருணா மட்டக்களப்பு அம்பாறையைத் தனித்தனியாக பிரித்து அரசியல் வேலைசெய்யலாம் எனத் திட்டமிட்டான். இவ்விடயமானது அப்போதைய சுழ்நிலையில் சாதகமாகக்கூடிய வேலையல்ல! ஏனெனில் அத்திட்டமிடலானது அந்நாளில் இயக்கப்பணிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமானதாகவே அமையும். இதனால் பலனடையப்போவது எதிரிகளும் எதிரிகள் சார்பான அரசியல்வாதிகளுமே என கப்டன் பிரான்சிஸ் அத்திட்டத்தை எதிர்த்தான். இதனால் கருணாவுக்கும் பிரான்சிஸிற்கும் கருத்துமுரண்பாடு வலுத்தது. இந் நிலையில் பிரான்சிஸ் தேசியத் தலைவரை நேரடியாகச் சந்தித்து நிலமையை எடுத்துதம்பினான். தேசியத் தலைவரும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை! எனவே பிரான்சிஸ் கூறுவது யதார்த்த ரீதியாகச் சரியானது என்றும் அதேபோல்ச் செய்யும்படி பிரான்சிஸிற்கு கூறினார். இதைக் கருணாவுக்கும் செயற்படுத்துமாறு தலைவர் கட்டளையிட்டார்.இதனால் மனமுடைந்த கருணாவுக்கு தனது பிரித்தாளும் நடவடிக்கை புஸ்வானமானதையிட்டு பிரான்சிஸின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. தனது குள்ள நரிப்புத்தியைப் பயன்படுத்தி பல காரணங்கள்கூறி அந்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலைப் பிரான்சிஸிடமிருத்து மிகவும் கபடத்தனமாக அந்த கபடதாரியான கருணா பறித்தெடுத்தான். அந்த பிஸ்டலுக்கு மாற்றீடாக ஒரு பிஸ்டலும் கொடுக்கவில்லை.1988ல் 10ம் மாதத்தில் 31ம் திகதி பிரான்சிஸின் சொந்த ஊரில் IPKF சுற்றிவளைப்பு நடந்தது. இதில் பிரான்சிஸ் காலில் துப்பாக்கிச் சூடுபட்டு வீடொன்றின் புகைக்கூட்டில் மறைந்துகொண்டான். ஆனால் காலில் பீறிட்ட குருதி எதிரிக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. அந்நிலையால் கயவன் கருணாவின் சதியால் எதிரியை திருப்பிச்சுடுவதற்குகூட பிஸ்டல் இல்லாத நிலையில் சயனைட் அருந்தி அந்த வீரமறவன் தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே வீரச்சாவையடைந்தான்.அந்த மண்ணும் பெருமையுடன் அந்த வீரனை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டது.இறுதி நேரத்தில் கருணா பறித்த அந்த பிஸ்டல் பிரான்சிஸின் கைகளில் இருந்திருந்தால் அந்த மாவீரன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகயிருந்திருக்கும் என எல்லோரும் கருதினர்.எது எப்படியோ! பலகாலம் தனது படிப்பு, பட்டம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்னலம் கருதாது நாட்டின் விடுதலையே குறியாககொண்டு இலட்சிவேட்கையுடன் அதுவும் நகர்ப்புறத்தில் எதிரியுடன் அரசியல்போர் செய்த அந்த புலிமறவன் வீரச்சாவையடைந்துவிட்டான்.பலகாலமாக மட்டுநகரில் அரசியல் புயலாக வீசியவன் ஓய்ந்துவிட்டான்.பிரான்சிஸின் வீரச்சாவுக்கு பின்னர் இயக்க வேலையின் நிமிர்த்தம் கொழும்புசென்ற பிரான்சிஸின் மூத்த சகோதரனான 2ம் லெப்டினன் சரவணபவான் அங்கு வீரச்சாவையடைந்தான்.அவருக்கு அங்கு உதவிக்குச் சென்ற உறவினர் சிலரும் இச்சம்பவத்தில் காணாமல் போனார்கள்.இந் நிகழ்வானது 1989 IPKF காலத்திலேயே நடந்தது. கப்டன் பிரான்சிஸின் சகோதரர் 2ம் லெப். சரவணபவான் ஆரம்பகாலத்தில் இளைஞர் பேரவையின் உறுப்பினராயிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கப்டன் பிரான்சிஸின் சாவானது எதிரிக்கும் துரோகிகளுக்கும் கொண்டாட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் ஆனால் கயவன் கருணாவின் நயவஞ்சகமான மனம் பல தடவை குதுகலத்தால் மத்தளமிட்டதை எவரும் அறிந்திடவோ புரிந்திடவோ சந்தர்ப்பம் இல்லை என்பது உண்மைதான்.இச்சம்பவத்தால் பல பேர் வெறுப்படைந்து கருணாமேல் கோபமாயிருந்தாலும் பிரான்சிஸிற்கு கருணா செய்த வஞ்சகத்தன்மையை வெளிப்படையாக அந் நாட்களில் விமர்சித்தவர்களில் மேஜர் அன்ரனியும், றம்போ பிரசாத்துமாகும். இவர்களுக்கு கருணா செய்த சதி என்ன?கெடுதல் செயல்கள் என்ன என்று பின்வரும் தொடர்களில் எழுதுகி;ன்றேன்.....(7) வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.தேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்!ஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை! என்ன காரணம்?அதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது. கொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது. ஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.ஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி!இச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான். இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.அன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல! தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.தலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.அன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.இச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.இக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான். இதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள் லேஞ்சர் வழங்கினார்.தேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன! அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ?எனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா?சீ!சீ! அப்படி நடக்காது! நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று...!(8) மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.அம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.முன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.அந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.இந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய்! என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்குள்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.இச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான்.அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சன்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.இந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.இச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை அன்ரனிக்குயின் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிருந்து IPKF யினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார்கள்.அம்பாறையில் பின்னடைவைக் கண்ட ராசிக்குழுவினர் மட்டக்களப்பு வடக்கே சத்துரக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம்வரை கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி முகாம்களை அமைத்திருந்தனர். அன்ரனியின் செல்லவாக்கைச்சரியச் செய்ய இதுதான் தருனம் என கனவு கண்ட கருணா தனது படையணியை இறக்கி தன்னாமுனை வரை நகர்த்தினான் ஆனால் சத்துருக்கொண்டானில் ராசிக் குழுவினர் கடுமையான எதிர்ப்பிருந்தது. தன்னாமுனைக்கு மேல் நகரமுடியாமல் கருணாவின் படையணி திண்டாடியது. படுவான்கரைப்பிரதேசங்களான வவுனதீவு, உன்னிச்சை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் என்பன ராசிக்குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசங்களாகும்.அந்த TNA யின் ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வழியாக பங்குடாவெளி வந்து ஏறாவுர் வர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த நகரைத் தக்கவைக்க பங்குடாவெளியில் மதியை கருணா நியமித்தான்(கிரானில் முதல் படுகொலையை கருனாவுடன் சேர்ந்து செய்த மதி) சகபோராளிகளுகுத் தெரியாமல்அவர்களை விட்டு விட்டு மதி தப்பியொடி விட்டான்.அவ்வேளையில் கருணா தனது மெய்க்காப்பாளர்களுடனும் சில போராகளிகளுடனும் கொம்மாதுறையில் தளமிட்டிருந்தான். பங்குகுடாவெளியில் ராசிக்குழுவினர் வருவதையறிந்த கருணா தனது மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான கிரானுக்குத் தப்பிச்சென்று விட்டான். பங்குடாவெளி வரை வந்த ராசிக்குழுவினரை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் சகபோராளிகளுடன் சேர்ந்து மிக துனிச்சலுடன் கொஞ்ச நிமிடத்திற்குள் பதில் தாக்குதல் செய்து முறியடித்து பின்வாங்க செய்தனர்.பங்குடாவெளி வந்த ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வரை பின்நோக்கி ஒடி விட்டனர். ராசிக்குழுவினர் பின்வாங்கிய செய்தியை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் கருணாவுக்கு அறிவித்தனார். நீங்கள் கூறுவது உண்மையா எனக் கேட்ட கருணா அதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் கொம்மாதுறைக்கு வந்து சேர்ந்தான்.தெல்லிப்பளையை சேர்ந்த மேஜர் அபயனுக்கும் ரம்போ பிரசாத்திற்கும் கருணா செய்த துரோகங்கள் என்ன என்னென்று இத்தொடரில் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இது இவ்வாறு இருக்க இரண்டு நாட்களாகியும் தான்னாமுனையிருந்து கருனாவின் படையனியால் முன்னேற முடியவில்லை! மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை! என்ன காரணம்? என்று தலைவர் கருணாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார். கருணாவுக்கு இது பெருத்த அவமானமாகயிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் பலமைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டே தொலைத்தொடர்பில் தொடர்பு கொண்டு கருணா காரணம் கேட்டானான். ஆதற்கு அவர்கள் அன்ரனி இருந்திருந்தால் எப்போதே பிடித்திருப்போம் என்றும் அன்ரனி இங்கு வரவேண்டும் என்றும் எல்லோரும் விரும்பினர்.அந்நேரம் தலைவர் தன்னை பிழையாக விளங்கிகொள்வார் என நினைத்த கருணா அன்ரனியை அம்பாறையிருந்து உடன் வரும்படி அறிவித்தான். அன்ரனி என்ற வீரத்தளபதி வருகின்றான் என்பதை அறிந்து கொண்ட ராசிக்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முட்டை முடிச்சுகளைக்கட்டி மட்டுநகரை விட்டு ஒடத் தொடங்கினர். அன்ரனியால் முற்றுமுழுதாக மட்டு நகர் மீட்கப்பட்டது.ஆனால் மட்டு நகரை தான் வெற்றிகொண்டு மீட்டதாக கருணா கதையளந்தான்.பளுகாமத்தில் ராசிக்குழுவினரின் முகாமைத் தாக்கும் போது கொக்கட்டிச்சோலையிருந்து சக ராசிக்குழுவினரின் உதவி கிடைக்கும் என்று கொக்கட்டிச்சோலை அம்பலத்தடியில் மேஜர் றோபேட் தலைமையில் கட்அவுட் போடப்பட்டது. இவ்வேளையில் குறுமன்வெளியைச்சேர்ந்த தாசன் என்ற போராளி ராசிக்குழுவின் முகாமைப்பார்க்கச் சென்றார். ராசிக்குழுவினர் ஆயுததளபாடங்களை வாகனங்களில் ஏற்றி வைத்துவிட்டு ஏற்கனவே தப்பி சென்று விட்டனர்.தாசன் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்து விட்;டு ஆயுதங்களை வாகனத்தில் கொன்டு வந்து சேர்த்தான்.இதை வெகுதெலையிருந்து அவாதனித்த கருணா ராசிக்குழுவின் முகாமை தகர்த்து பெருமளவு கனரக ஆயுதங்களை தான் கைப்பற்றியதாக எல்லாருக்கும் பிரச்சாரம் செய்தான். ஆனால் இந்த தாசனுக்கு கருணவால் செய்யப்பட்ட கொடுமைகள் பல.. பல இந்த தாசன் தற்போது எங்கு எந்த நிலையில் வாழ்கின்றான் என்று தெரியாது!ராசிக்குழுவினரின் பளுகாமம் முகாம் கைப்பற்றப்பட்டு செய்தி கேட்டு மற்றய TNA யினர் முன்னேறி வந்தனர். 1989ல் இச் சம்பவம் நடந்தது மேஜர் றேபேட்டுடன் 6 போராளிகளும் பரந்த வெளியில் பகலில் ராசிக்குழுவினருடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டியிருந்தனர். அப்போது அவர்களின் ரவை முடிந்து விட்டது. கருணாவிடம் உதவியும் ரவையும் கேட்டனர். கருணா பதில் கூறவில்லை! இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது! ஆனால் சரணடையமாட்டேம் என்று இறுதியாக தொலைத்தொடர்பு சாதனத்தில் பேசி சயனைட் அருந்தி மேஜர் றோபேட் மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த வேனு உட்பட 6 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதே நேரம் 3 கிலோ மீற்றருக்குள் 300 பேருடன் கருணா என்ற நயவஞ்சகன் இருந்தான் என்பது குறிப்பிடதக்க விடயம்.ஆனால் அந்த 6 மாவீரர்களின் புகழுடலைக்கூட கருணாவால் எடுக்க முடியவில்லை! மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான் கருனா! இதனால் மனமுடைந்த தாசன் இயக்கத்தை விட்டே வெளியேறினான். இச்செய்தியை அறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்.(9) கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். அன்ரனி இல்லாமல் செய்து காட்டவேண்டும் என்றா இப்படி செய்தீர்கள் என்று அன்ரனி கருணாவிடம் கேட்னான். இதனால் கருணாவுக்கும் அன்ரனிக்கும் கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.உன்னிச்சையிருந்த ராசிக்குழுவினரின் முகாமை அழிக்க அன்ரனியின் உதவியை நாடக்கூடாது என்று கருதிய கருணா அன்ரனியை கரடியனாற்றில் நிறுத்தி விட்டு தானும் செல்லாமல் படையனியை அனுப்பினான். ஆனால் ராசிக்குழுவினரின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாத படையனிகள் கருணாவிடம் இது பற்றி என்ன செய்லாம் எனக் கேட்டனர். ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் அவர்கள் சிக்கியிருந்தனர்.பிரச்சைனையாகவுள்ளது அன்ரனி நீ போ என கருணா கெஞ்சுவது போல அன்ரனியிடம் கூறினான். அன்ரனியின் வேகமான தாக்குதலால் நிலை குலைந்த ராசிக்குழுவினர் உயிர் தப்பினால் போது என்று சிதறி ஓடினர். இதனால் சக போராளிகள் அன்ரனியை மிகவும் பாரட்டினர். போராளிகளிடத்தில் மட்டுமல்ல மக்கள் இடத்திலும் அன்ரனியின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.மட்டக்களப்பு அம்பாறையில் நடந்த ராசிக்குழு மற்றும் இந்திய படை மீதான சன்டைகளை தானே முன்னின்று நடத்தி வெற்றி வாகை சுடியதாக கயவன் கருணா பெயர் வாங்கினான். பல சந்தர்ப்பங்களை பயன் படுத்தி அன்ரனி மீது பொய் பிரச்சாரங்களை நடத்தி தலைமையிடம் தான் நல்ல மனிதன் போல பெயர் வாங்கிக் கொண்டான். ஆனால் அன்ரனியுடன் நின்று செயல் பட்டவர்களுக்கும் அவனின் போர் திறனை நேரடியாக கண்டவர்களுக்கும் அவனின் வீரம் புரியும்.ஏன்! ராசிக் என்ற துரோகி உயிருடன் இருந்திருந்தால் அன்ரனியின் அதிரடித்தாக்குதல்கள் பற்றி அடிக்கடி நினைத்திருப்பான்.யாழ் மண்ணதும் அன்ரனியவனின் வீரமறியும். யாழ் கோட்டை மற்றும் பலாலிப்பகுதிகளிலும் அன்ரனியின் தாக்குல் வியுகங்கள் அமைந்தன. ஒரு தடவை பலாலியிருந்து முன்னேறிய சிறிலங்கா படைகளை தனது புPஆபு இயந்திர துப்பாக்கியால் தனித்து நின்று தனக்கு உதவி கிடைக்கும் வரை இராணுவத்தினர் மீண்டும் முன்னேற முடியாமல் தடுத்த பெருமை அன்ரனியை சாரும் என பலரும் போசிக் கொன்டனர். மேஜர் அன்ரனியுடன் யாழில் நின்று செயற்பட்ட போராளிகள் அன்ரனியின் இனிமையான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்வர்;.1990 காலப்ப்பகுதிகளில் அன்ரனி மட்டக்களப்பிலிருந்திருந்தால் கும்புறுமுலை, களுவாஞ்சிக்குடி இராணுவமுகாம்களின் தாக்குதலகள் தோல்வியடைந்திருக்கமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேஜர் அன்ரனிக்கு கருணாவால் பின்னப்பட்ட சதிவலைதன்னை இனம் காட்டி கருணாவுடன் நேரடியாக எதித்தவர்களில் முக்கியாக கருதப்பட்டவர் கிரேக்மாஸ்டர் யார் இவர்? இவரின்பின்னனி என்ன என்று பார்ப்போம். கனேசர் கரிகாலன் என்ற இயற்பெயர் கொண்ட கிரேக்மாஸ்டர் யாழ்ப்பாணம் சன்டியிலிப்பாய்யை சேர்ந்தவர். இயற்கையாவே பண்பும் பணிவும் மற்றவர்களிடத்தில் கனிவுடன் நடக்கும் குணவியல்பும் கொண்ட இவர் நேர்மையற்ற செயல் நடக்கும் போதொல்லாம் அதை தட்டிக்கேட்க தவறுவதில்லை. ஒரு மருத்துவ போராளியாக தென்தமிழித்திற்கு 1987யில் காலடி எடுத்து வைத்தாh.; புலிபாய்ந்தகல் பகுதியிலும் அதன் பின் 1988லிருந்து 1989 வரை அம்பாறையில் மருத்துவ போராளியாகச் செயற்பட்டார்.இவர் அன்ரனியின் நெருங்கிய நண்பராவார் ஒருதடைவை இவரின் தாயார் யாழ்ப்பானத்திலிருந்து அம்பாறை வந்து இயக்கத்தை விட்டு விலகி வரும் படியும் வெளிநாடு அனுப்புவதாகவும் கூறினார்;. அதை முற்று முழுதாக மறுத்த இவர்; தான் இயக்கத்தையோ சக போராளிகளையோ விட்டு வரமாட்டேன் எனக்கூறி தாயாரை அனுப்பி வைத்தார். அன்ரனிக்கு கருணா செய்த வஞ்சகத்தை எதிர்த்து கருணாவுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு அதே கருணாவால் வஞ்சிக்கப்பட்டார். தனது தாய் அழைத்த நேரம் மறுத்து நின்ற அந்த மனிதன் அன்ரனியின் பிரச்சனையால் மனம் உடைந்து யாழ் சென்றார்.அங்கு சென்று மௌனமாகி விட்டார். ஏன் அவரின் உன்மைகள் மௌனீத்தன என்று தெரியாது! ஆனால் தன்னால் ஏன் இயக்த்திற்குள் பிரச்சைனை என்று நினைத்தாரோ!அல்லது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி ! ஆளை விட்டால்; போதும் என்று நினைத்தாரோ யாருக்கும் தெரியும்!1990யில் அன்ரனி யாழ்ப்பாணத்தில் நேரடியாக சந்தித்த கிரேக் மாஸ்டர் அன்ரனியிடம் இப்படி கூறினாராம். ஏன்றைக்கோ ஒரு நாளைக்கு இயக்கத்திற்கு கருணா கரியை புசுவான் என்று வேறு சில நெருங்கிய போராளிகளுக்கும் இதை கூறினாராம். தற்போது கிரேக் மாஸ்டர் இயக்கத்தை விட்டு விலகி ஜரோப்பிய நாடென்றில் வாழ்ந்து வருகிறார்.பலாலிப்பகுதில் இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலென்றில் மேஜர்அன்ரனி என்ற வீரத்தளபதி வீரச்சாவடைந்து விட்டான். தமிழ் தேசிய உணர்வு கொண்டவனும் தலைமைத்துவ அதீத விசுவாசம் கொண்டவனுமான அந்த செயல் வீரனை யாழ் மண்ணது பெருமையுடன் ஏற்றுக் கொண்டது. அன்ரனியின் இழப்பால் அவனை நேசித்தவர்களின் இதயம் கனத்தது. ஆனால் கருணா என்ற துரோகி மட்டும் நிம்மதி பெருமுச்சு விட்டு குதுகலித்தான் என்பது மட்டும் நிஜம்.கருணா என்ற துரோகி மட்டக்களப்பு மண்ணுக்கு மட்டுமல்ல ஒடடுமொத்த தமிழினத்திற்ம் தன்னை வளர்த்த இயக்கத்திற்கும் தலைவருக்கும் மாபெரும் துரோகமதைச் செய்தான். தன்னிச்சையாக தனது துரோகத்தனத்தை தமிழினத்துற்கு மட்டுமல்ல முழுஉலகத்திற்குமே வெளிப்படுத்தினான். குளிபானம் அருந்திக்கொணடே இயக்கத்திலிருந்து பிரிந்து தான் தனியே செயற்படபோவதாக செய்தி ஊடகங்ளுக்கு பேட்டியளித்தான்.ஆனால் அன்ரனி மட்டும் அம்பாறையில் அந்நேரத்திலிருந்திருந்தால் குளிர்பானங்கள் என்ன பல பாணங்கள் அருந்த செய்து கருணா என்ற கயவனின் குடலலையே உருவி மாலையாக அணிந்திருப்பான் எனற உண்மை எத்தனை பேருக்குத் தொரியுமோ தெரியாது. கருணாவின் துரோகங்கள் தொடரும்… வாழ்க தமிழ்த் தேசியம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27697679-114703044075904939?l=navneth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://navneth.blogspot.com/feeds/114703044075904939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27697679&amp;postID=114703044075904939' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27697679/posts/default/114703044075904939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27697679/posts/default/114703044075904939'/><link rel='alternate' type='text/html' href='http://navneth.blogspot.com/2006/05/blog-post_07.html' title='விடுதலைப்புலி'/><author><name>navneth</name><uri>http://www.blogger.com/profile/09193681887270637188</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
